பழ மொழி ஒன்று கூறுவார்கள் கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுட்டு கொடுக்கும் என சொல்வார்கள் அது நிஜத்திலேயே நடந்தால் எப்படி இருக்கும் மனிதர்கள் வாழ்வில் பின்னால் நடப்பதை முன் கூட்டியே சொல்வதில் ரேகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன அதனால் தான் பழைய காலத்தில் எல்லாம் ஜா தகத்தை விட கைரேகைகளை பெரிதும் பார்க்கும் பழக்கம் இருந்தது.
மேலும் பொதுவாகவே கைரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் கையில் உள்ள நான்கு முக்கிய ரேகைகளைத் தவிரசிலருக்கு நடு விரல் மோதிரலுக்கு அடியில் வளைந்த நிலையில் ஒருரேகை போகும் இது ஒரு வட்ட வளையத்தை உருவாக்கும் இதை சுக்கிர வளையம் அல்லது காதல் பெல்ட் எனச் கூறுவார்கள்.
இது எல்லோருக்கும் இருக்காது காதலில் யாருக்கெல்லாம் பிரச்சனை இருக்குமோ அவர்களுக்கு தான் இருக்கும் இதே போல் சுண்டு விரலின் கீழே ஆரம்பாகி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலை நோக்கி ஒரு ரேகை செல்லும்.
இதை இதய ரேகை என கூறுவார்கள் படத்தில் இருப்பது போல் இதய ரேகை நடுவிரலின் மேலே செல்வது போல் இருந்தால் யாரையும் சார்ந்து வாழ விரும் பாதவர்க ளாக இருப்பார்கள் இவர்கள் புத்திக் கூர்மையுடன் லட்சியத்தில் உறுதியுடனும் இருப்பார்கள்.
2 வது விசயம் என்னவென்றால் சிலருக்கு இதய ரேகை இந்த 2வது படத்தில் காட்டிய படி நடுவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு இடையே போனால் அவர்கள் அதிக உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள் அதுமட்டுமின்றி அவர்கள் அதிக கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
3வது படத்தில் இருப்பது போல் இதய ரேகை ஆட்காட்டி விரலின் மேலே ஏறினால் இவர்கள் எந்த சூழலிலும் மனம் தளராதவர்களாக இருப்பார்கள் மகிழ்ச்சி இவர்களிடம் எப்போதும் இருக்கும் இவர்கள் மனம் தளராமல் எந்த சூழலையும் எதிர் கொள்வார்கள்.
4வது படத்தில் இருப்பது போல் இதயரேகை கொண்டவர்கள் பொறுமையும் சக மனிதர்கள் மீது அக்கறையும் கொண்டவர்கள் அமைதியான சுபாவமும் ரொம்ப நல்லவர்களாகவும் இருப்பார்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.