இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்..ஒரே நாளில் பிரசவம்..நடந்த அதிசயத்தை பார்த்தீங்களா..!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர் இவரது மனைவி அம்பிகா இந்த தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் ஸ்ரீபிரியா , ஸ்ரீலட்சுமி இவர்கள் இருவரும் 1995 அக்டோபர் 11-ம் தேதி பிறந்தார்கள் பிறந்தது முதல் ஒன்றாகவே வளர்ந்தார்கள் ஒன்றாகவே படித்தார்கள் இவர்கள் இருவரும் CA படித்து முடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டிய நிலையில், மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணத்தை நடத்தினர்,அதாவது கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி  ஒரே மேடையில் கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

ஸ்ரீ பிரியாவின் கணவர் வினூப் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிகிறார்,ஸ்ரீ லட்சுமியின் கணவர் திருவனந்தபுரத்தில் சொந்தமாக சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறார்.

இந்தநிலையில் க ர் ப் ப மா க இருந்த இருவரும் தாங்கள் பிறந்த ஆஸ்பத்திரியிலேயே குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பினர்,இந்நிலையில் கடந்த  தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அன்று இரவு ஸ்ரீலெட்சுமிக்கும் வ லி ஏற்பட்டு உள்ளது இதையடுத்து அவரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்,மதியம் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்,மாலை 6.45 மணிக்கு ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது,அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பது குறிப்பிடத்தக்கது அதுவும் ‘ஓ’ பாசிட்டிவ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

by

Tags: