தினமும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு வாங்கி யூஸ் பண்றீங்களா இத படிச்சா இனி வாங்கவே மாட்டீங்க உலக ஆராய்ச்சியாளர்களால் காலை உணவுக்கு மிகச் சிறந்த உணவு எனக் கருதப்படும் ஆரோக்கிய உணவாக இட்லி தான் முதல் இடத்தில் இருக்கிறது அதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் இட்லியில் நாம் எண்ணெய் சேர்ப்பதில்லை அதோடு இந்த இட்லி நீராவி மூலமாக சமைக்கப்படுகிறது அதுதான் இதிலிருக்கும் மிகப்பெரிய ஆரோக்கியமான விஷயம்.
ரெடிமேட் மாவு இதனால் செரிமானக் கோளாறோ அல்லது கொலஸ்ட்ரால் பிரச்னையோ ஏற்படாது என்பதனால் தான் இட்லி மிகச் சிறந்த காலை உணவாகக் கூறப்படுகிறது.ஆனால் இன்று நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் போன்ற காரணத்தினால் நாம் இட்லி தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கிறது என்பதை அறியாமலேயே நாம் அதை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றோம்.
சுகாதாரமின்மை இதற்கு முன்பாக ஆட்டுக் கல்லில் தான் மாவு அரைத்து சாப்பிடும் பழக்கம் நமக்கு இருந்து வந்தது கிரைண்டர் வந்தபின்பு ஆட்டுக்கல் வீட்டில் காட்சிப் பொருளாக இருந்தது பலருடைய வீடுகளில் பின்புறத்தில் குப்பையாக தான் இருக்கிறது.
ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டும் முன்னரும் மாவு ஆட்டிய பின்பும் சுத்தமாகக் கழுவும் பழக்கம் நம்முடைய வீட்டு ஆட்களுக்கு இருந்தது ஆனால் கடைகளில் மாவு விற்க ஆட்டுவதற்கான அவர்கள் பயன்படுத்தும் பெரிய பெரிய கிரைண்டர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.
ஈகோலி பாக்டீரியா மாவு ஆட்டுகின்ற போது அதன்பிறகு கிரைண்டரைக் கழுவுகின்ற பொழுது சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் அப்படி இல்லையென்றால் ஈகோலி என்னும் பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படும். இது மாவாட்டுகின்ற பொழுது இட்லி தோசை மாவிற்குள் அடைக்கலம் ஆகிவிடும்.
உடல்நலக் குறைபாடுகள்இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத்தினால் நாள்பட்ட வயிற்று வலி உடல் வறட்சி வாந்தி மயக்கம் இரைப்பை நோய், தலை சுற்றுதல் ஆகிய உடல் நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.