இன்றைக்கு எல்லாமே நவீன மயமாக்கப்பட்டு விட்டது அதனால் காய்கறி முதல் துணி வரைக்கும் அனைத்தையும் ஒன்லைனில் வாங்க ஆரம்பித்து விட்டோம்,வீட்டில் இருந்தபடி சுலபமாக அனைத்து வேலைகளை செய்ய ஆரம்பிக்கும் போதே அதிலிருந்து வரும் சில ஏமாற்றங்களையும் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்.
ஒன்லைனில் நாம் ஒன்று ஓர்டர் பண்ணினால் அதற்கு எதிர்மறையாக நமக்கு ஒரு பொருள் வந்து சேரும் அவ்வாறான சம்பவங்கள் தினமும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றதுஅதேபோல இன்றும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
உயிருடன் வந்த எலி,நிதின் அரோரா என்பவர் ஒரு தளத்தில் தான் ஓர்டர் செய்த பிரட் பாக்கெட்டிற்குள் உயிருடன் எலி நெளிந்துக் கொண்டிருப்பதை வீடியோவாக எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார் அதில் குறித்த சேவையில் மிகவும்விரும்பத்தகாத அனுபவம் கிடைத்திருக்கிறது. கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ஓர்டர் செய்த பிரட் பாக்கெட்டில் உயிரோடு ஒரு எலி இருந்திருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
இதனைப் பார்த்து விட்டுதான் அதனை வீடியோ எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதனைப் பார்த்த இணைய வாசிகள் குறித்த ஓர்டர் தளத்தை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
Most unpleasant experience with @letsblinkit , where alive rat was delivered inside the bread packet ordered on 1.2.23. This is alarming for all of us. If 10 minutes delivery has such baggage, @blinkitcares I would rather wait for a few hours than take such items.#blinkit #zomato pic.twitter.com/RHNOj6tswA
— Nitin Arora (@NitinA14261863) February 3, 2023