அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கரி சேர்த்து கட்டுவது வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை மிளகாய் கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும் புதியதை கட்டிய பிறகு பழையதை யார் காலும் படாதபடி இடத்தில் வீசிவிட வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள்.
ஏன் இதை நமது முன்னோர்கள் செய்தனர்? இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன?
எலுமிச்சை சிவப்பு மிளகாய் கரி சேர்த்து வீடு அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால் பெரும்பாலும் அனைவரும் அலக்ஷ்மி கதை தான் கூறுவார் அலக்ஷ்மி என்பது மூதேவி என அறியப்படும் லக்ஷிமியின் தங்கை ஆவார் இவர் வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவார் என்ற கதை ஒன்றை கூறுவார்.
மூடநம்பிக்கை அலக்ஷ்மி புளிப்பு காரம் சூடான பொருட்களை விரும்புவார் அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கரி சேர்த்து கட்டி வைப்பதால் அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு வீட்டுக்குள் நுழையாமல் சென்றுவிடுவார்.
இதனால் செழிப்பு தங்கும் என நம்புகிறார்கள் அறிவியல் என்ன கூறுகிறது எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது இதில் கயிறு கோர்த்து கட்டும் போது காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும் மெல்ல மெல்ல அது ஆவியாக வெளிப்படும் ஆரோக்கியம் இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன எலுமிச்சை மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசத்தை தாண்டி இது நச்சுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன.
இதை மிதித்து அப்படியே வீட்டுக்குள் வந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் தான் இதை மிதிக்க கூடாது என்கிறார்கள் ஆனால் இரசாயன கலப்பு கொண்ட அவற்றை நாம் சுவாசிப்பதால் நாள்பட சுவாசக் கோளாறுகள் உண்டாகலாம் ஆ னா ல் இந்த இயற்கை முறையால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.