இன்று எல்லோருக்கும் ஒரே கஷ்டம் பெரிய கஷ்டம் பண கஷ்டம் தான் நமக்கு வரக்கூடிய வருமானத்தை வீண் விரயம் ஆகாமல் சேமித்து வைத்து இருந்தாலே போதும் அது பலமடங்கு பெருக தொடங்கிவிடும் பத்து ரூபாய் வந்தால் அதற்கு பின்னால் நூறு ரூபாய்க்கு செலவு வந்து நிற்கிறது கையில் காசில்லை என்றால் செலவே இல்லை கையில் கொஞ்சம் காசு வந்தாலும் செலவுக்கு அது போதிய பணமாக அமைவது கிடையாது.
பணத்தை தக்க வைத்துக்கொள்ள பணம் பல மடங்காக பெருக வீண் விரயம் ஆகாமல் இருக்க இந்த ஒரே ஒரு அரச இலையை மட்டும் உங்களுடைய பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் இப்படி வைத்தாலே போதும் அரச இலையின் மகத்துவம் பெரும்பாலும் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் விநாயகரின் ரூபத்தை கொண்டது அரச இலை தேவர்கள் ரிஷிகள் முனிகள் அனைவரும் தவமிருந்த இலை அரசிலை.
நேர்மறை ஆற்றலை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ள இந்த அரச இலை இருக்கும் இடத்தில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தங்காது பச்சையாக கிழிசல் இல்லாத அரச இலையை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் லாபம் என்ற வார்த்தையை மட்டும் அந்த விநாயகரை மனதார நினைத்து பேனாவில் எழுதி விடுங்கள் ஒரு பத்து ரூபாயை அந்த அரச இலைக்கு உள்ளே வைத்து அரச இலையையும் பத்து ரூபாய் நோட்டையும் ஒன்றாக சேர்த்து அப்படியே சுருட்டி ஒரு மஞ்சள் நிற நூல் போட்டு கட்டி உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள்.
இந்த பரிகாரத்தை செய்து விட்டால் பணம் காசு தங்கி விடுமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கலாம் நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய எந்த பரிகாரமாக இருந்தாலும் அது நமக்கு பலனை பலமடங்காக கொடுக்கும் வெள்ளிக்கிழமை மட்டும் அரச மரத்திலிருந்து அரசு இலையை பறிக்காதீர்கள் மற்ற எந்த நாளில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம், 7 வாரங்கள் அரச இலையை மாற்றி பாருங்கள்.